மழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தற்போது, நிவர் புயலால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் இருக்கும் பிக் பாஸ் வீட்டு கார்டன் ஏரியாவிலும் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கண்ட போட்டியாளர்கள் பயந்து தாங்கள் வெளியேறிக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். பின், நேற்று மாலை 4 மணிக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களை தங்க வைத்தது விஜய் டிவி. வீட்டில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றிய பிறகு இன்று (நவம்பர் 26-ஆம் தேதி) இரவு மீண்டும் போட்டியாளர்கள் வீட்டுக்குள் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு!


மழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு!1